இக்கட்டுரையில் நெருக்கடி கால சட்டமுறைகள் பற்றி TNPSC Exam-ல் கேட்கக்கூடிய வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக Point by Point-காக தரப்பட்டுள்ளது. மேலும் TNPSC Exam தொடா் பயிற்சி மற்றும் வீடா முயற்சி செய்தால் வெற்றி நிச்சியம்.
நெருக்கடி கால சட்டமுறைகள்
அரசியலமைப்பின் பகுதி-18-ல் (Part XVIII) ஷரத்து 22 முதல் ஷரத்து 360 வரை நெருக்கடி கால சட்ட வகைமுறைகள் (Emergency Provisions) பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
நெருக்கடி கால வழிமுறைகள்
நெருக்கடி நிலை என்பது திடீரென்று தோன்றும் அசாதாரண சூழ்நிலையாகும். எதிர்காலத்தில் இத்தகைய அசாதாரண சூழ்நிலைகள் தோன்றலாம் என்றும், அத்தகைய சூழலில் அரசியலமைப்பு இயல்பான முறையில் செயல்பட முடியாது என்றும், நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பேணிக்காப்பதற்காக அரசியலமைப்பின் சில பிரிவுகளைத் தற்காலிகமாக செயல்படாமல் நிறுத்தி வைப்பது அவசியம் என்றும் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் எண்ணினர்.
எனவே அத்தகைய அசாதாரண சூழ்நிலைகளில் இந்திய அரசியலமைப்பு முற்றிலும் ஒற்றையாட்சி அரசாங்கமாக தன்னைத் தானே மாற்றிக் கொண்டு செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு மூன்று வகையான நெருக்கடி நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அவை (1) தேசிய நெருக்கடி நிலை (National Emergency) (2) மாநில நெருக்கடி நிலை (State Emergency) (3) நிதி நெருக்கடி நிலை (Financial Emergency) ஆகியன.
தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம்
இந்தியாவின் பாதுகாப்பு வெளித் தாக்குதலானே (External aggression), போரினாலோ ( War), அல் ஆயுதமேந்திய கலகங்களாலோ (Armed Rebellions இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என குடியரசுத் திருப்தியுற்றால், அவர் இந்தியா முழுமைக்குமோ அல்லது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ நெருக்கடி நிலைமை அறிவிப்பினை பிரகடனப்படுத்தலாம் (Proclamation) என ஷரத்து 352 (1) கூறுகிறது.
நெருக்கடி நிலை அறிவிப்பினை, மற்றொரு அறிவிப்பின் மூலமாகவோ மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.
தேசிய நெருக்கடி நிலைப் பிரகடன நடைமுறைகள்
இந்தப் பாடப் பகுதியிலிருந்து TNPSC Exam -இல் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகிறது. ஆகையால் முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Art.352 (3)-ன்படி, குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தலாம் என்று அமைச்சரவை தனது முடிவை எழுத்து மூலமாக அவருக்குத் தெரிவித்த பிறகு தான், குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தலாம்.
நெருக்கடி நிலைப் பிரகடனமானது பாராளு மன்றத்தின் இரு அவைகள் முன்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதனை இரு அவைகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அந்த நெருக்கடி நிலைப் பிரகடனம், ஒரு மாதத்திற்குள் தன் செயல் திறனை இழந்துவிடும் என ஷரத்து 352 (4) குறிப்பிடுகிறது.
நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமானது, பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு ஆதரவுடன் கூடிய சிறப்புப் பெரும்பான்மை (Special Majority) பலத்தால் நிறைவேற்றம் வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட்ட அப்பிரகடனம் 6 மாத காலம் வரை தொடா்ந்து அமலில் இருக்கும். அதற்கு மேலும் நெருக்கடி நிலைப் பிரகடனம் தொடர வேண்டுமெனில் மீண்டும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவ்வாறாக 6 மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று, அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை நெருக்கடி நிலைப் பிரகடனத்தைத் தொடர இயலும்.
அவசரநிலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கிற தீர்மானங்கள், அல்லது நீட்டிக்க வகை செய்யும் தீர்மானங்கள, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
அவசர நிலைப்பிரகடனம் வெளியிடப்பட்டதையோ, அது தொடர்வதையோ நிராகரிக்கும் தீர்மானத்தை மக்களவை நிறைவேற்றினால் உடனடியாக அவசரநிலைப் பிரகடனம் இரத்து செய்யப் பட வேண்டும்.
குடியரசுத் தலைவரின் நெருக்கடி நிலைப் பிரகடன அறிவிப்பு வெளியிடப்பட்டதையோ, அது தொடர்வதையோ, மக்களவை ஒரு எளிய பெரும்பான்மை (Simple Majority) ஆதரவின் வாயிலாக நிராகரித்து தீர்மானம் இயற்றினால், குடியரசுத் தலைவர் அப்பிரகடனத்தை இரத்து (Revoke) செய்ய வேண்டும்.
ஏற்கனவே ஒரு நெருக்கடி நிலைப் பிரகடனம் இருப்பினும், மேலும் ஒரு நெருக்கடி நிலைப் பிரகடனத்தை குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம்.
குடியரசுத் தலைவர் தாம் பிறப்பித்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தைத் தாமே எந்த நேரத்திலும், வேறொரு அறிவிப்பின் மூலம் திரும்பப் பெறலாம். இந்த அறிவிப்பிற்கு பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை.
Art.352-ல் உள்ள அவசர நிலைப் பிரகடனம் பற்றிய வகையுரைகள், 1979-ல் அமுலுக்கு வந்த 44-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978-ன் மேலும் கடுமையாக்கப்பட்டன.
அவசர நிலைப் பிரகடனம் கடுமையாக்கம்
(1) ‘உள்நாட்டு நெருக்கடி’ (internal disturbance) என்ற காரணத்தின்பேரில் ஜுன் 25, 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்த ஏற்பட்ட மிக மோசமான அனுபவங்களை அடுத்து ஷரத்து 352 (1)-ல் கூறப்பட்டிருந்த உள்நாட்டு தொந்தரவுகள் (internal disturbances) என்ற தெளிவற்ற சொற்களுக்குப் பதிலாக, ஆயுதக் கலவரம் (armed rebellion) என்ற சொல் இணைக்கப்பட்டன.
(2) பிரதமரின் வாய்மொழி ஒப்புதல் அல்லது அனுமதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் முறையினை கைவிடப்பட்டு,
44-வது திருத்தத்தின் மூலம் கேபினட்டின் தீர்மானம் எழுத்து மூலமாக குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்ப பின்னரே, அவர் நெருக்கடி நிலையை அறி முடியும் என்பது நிபந்தனையாக்கப்பட்டது.
(3) அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட் ட இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றிருந்த கால வரம்பு, 44-வது சட்ட திருத்த மூலம் 1 மாதமாகக் குறைக்கப்பட்டது.
(4) 44-வது திருத்தத்திற்கு முன்னர், அவசர நிலைப்பிரகடனம், பாராளுமன்றத்தில் ஒரு ஒப்புதல் பெற்ற பிறகு, கால வரையின்றி நெருக்கடி நிலை நடைமுறையில் இருக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால் 44-வது திருத்தம் அதை நீக்கி அவசர நிலையை 6 மாதம் வரை மட்டுமே நீட்டிக்க வழி செய்தது.
(5) 44-வது திருத்தத்திற்கு முன்பு விரை, அவசரநிலை அறிவிக்கப்பட்டு விட்டால், அதை முடிவுக்குக் உண்டு வர பாராளுமன்றத்திற்கு குறிப்பிட்ட வரையறைகள் இல்லாமல் இருந்தது. . இத்திருத்தத்திற்குப் பிறகு லோக் சபை உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்றம் கூட்டப்பட்டு, அவசரநிலையை நிராகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
(6) 44-வது திருத்தத்திற்கு முன்னர், போர், அயல்நாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் தொந்தரவுகள் (Internal disturbances) போன்ற எக்காரணத்திற்காக (Art.352) அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டாலும், Art.19 தாமாகவே செயலிழந்து விடும் என்று Art.358 வலியுறுத்தியது.
ஆனால் 44-வது திருத்தம், போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு ஆகிய இரு காரணங்களுக்காக அவசரநிலை அறிவிக்கப் பட்டால் மட்டுமே Art.19 தாமாக செயலிழக்கும் (Art.358) என்று வரையறுத்தது.
(7) மேலும் 44-வது திருத்தத்திற்கு முன்னர், அடிப்படை உரிமைகளில் எது வேண்டுமானாலும், நிறுத்தி வைக்கப்பட இயலும் என்ற நிலை இருந்தது. ஆனால் 44-வது திருத்தத்தின் மூலம், அவசர நிலைப் பிரகடனத்தின்போதும் Art.20 மற்றும் Art.21 ஆகிய இரு ஷரத்துக்களையும் நிறுத்திவைக்க இயலாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது. (TNPSC Exam-ல் இப்பகுதியிலிருந்து நிச்சயம் வினா இடம்பெறும்)
தேசிய நெருக்கடி நிலை – விளைவுகள்
Art.352-ன்படி பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலையினால் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன. (1) நெருக்கடி நிலையின்போது மாநில பட்டியலில் உள்ள தலைப்புக்களின் மீது அதிகாரம் பாராளுமன்றம் சட்டமியற்ற அதிகாரம் பெற்றுள்ளது.
(2) மத்திய-மாநில வருவாய்ப் பங்கீட்டு முறை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
(3) எந்த ஒரு மாநில அரசாங்கத்திற்கும், அம்மாநில நிர்வாகத்துறை அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்க வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மாநில அரசாங்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் சூழல் ஏற்படுகிறது.
(4) போர் மற்றும் வெளித்தாக்குதல்கள் காரணமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி காலத்தில், ஷரத்து 19-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்க ஷரத்து 358 வகை செய்கிறது.
அதாவது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடன் அடிப்படை உரிமைகளின் செயல் திறன் தாமாகவே செயலிழந்துவிடும்.
(5) நெருக்கடி நிலைக் காலத்தில் அடிப்படை உாிமைகளுக்காக பாிகாரம் தரும் (அரசியலமைப்பு தீா்வு உாிமை) (ஷரத்து 32) உாிமையை அரசு விலக்கி வைக்கலாம்.
(6) நெருக்கடி காலத்தில் மக்களவையின் காலத்தையும், மாநில சட்டப் பேரவைகளின் காலத்தையும், ஒரே சமயத்தில் ஓராண்டு வரை நீட்டிக்கலாம்,
ஆனால் நெருக்டி நிலை முடிந்தபின் 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது.
இந்தியாவில் தேசிய நெருக்கடி நிலைகள்
Article 352-ன்கீழ் முதல் தேசிய நெருக்கடி நிலைப் பிரகடம் அக்டோபா் 26, 1962-ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின்போது (Aggression) இந்தியாவில் (குடியரசுத் தலைவராக இருந்தவா் டாக்டா் இராதாகிருஷ்ணன், பிரதமராக இருந்தவர் ஜவகர்லால் நேரு) குடியரசுத்த லைவரால் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி 10, 1968-ல் குடியரசுத் தலைவர் அறிவிப்பின்படி விலக்கிக் கொள்ளப்பட்டது.
தேசிய நெருக்கடி
Art.352-ன் கீழ் இரண்டாவது தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம் டிசம்பர் 3, 1971-ல் பாகிஸ்தான் இந்தியா மீது அறிவிக்கப்படாத போர் (War) காரணமாக அறிவிக்கப்பட்டது.
அப்போது குடியரசுத் தலைவராக வி.வி.கிரி அவா்களும், பிரதமராக இந்திராகாந்தி அவா்களும் பொறுப்பில் இருந்தாா்கள்
இந்த இரண்டாவது தேசிய நெருக்கடி நிலை அமலில் இருக்கும்போதே, உள்நாட்டுக் கிளர்ச்சிகளின் (Internal Revolt) விளைவாக, ஜுன் 25, 1975-ல் Art.352-ன் கீழ் மூன்றாவது தேசிய நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
அப்போது குடியரசுத் தலைவராக ஃபக்ருதீன் அலி அகமது அவா்களும், பிரதமராக இந்திரா காந்தி அவா்களும் இருந்தாா்கள்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனங்கள் இரண்டும் மார்ச் 21, 1977-ல் விலக்கிக் கொள்ளப்பட்டன.
நெருக்கடி நிலைப் பிரகடனம் (Proclamation of Emergency) என்னும் சொல் Art.352-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய நெருக்கடி நிலையையே (National Emergency) குறிப்பிடுகிறது.
மாநில நெருக்கடி
Art.356-ன் கீழ் பிரகடனப்படுத்தப்படும் மாநில நெருக்கடி நிலையை ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ (“President’s Rule”) என்று குறிப்பிடுவர்.
Art.356-ன்படி, குடியரசுத் தலைவர், மாநில ஆளுநரின் அறிக்கை அடிப்படையிலோ அல்லது வேறு விதத்திலோ அம்மாநில அரசாங்கம் அரசியலமைப்பு சட்டவகை முறைகளின்படி நடத்த இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளது என்றோ, அல்லது அம்மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயலிழந்து விட்டது என்றோ குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால், அந்த மாநிலத்தில், குடியரசுத் தலைவர் மாநில நெருக்கடி நிலையைப் (State Emergency) பிரகடனப்படுத்தலாம்.
ஷரத்து 356-ன்படியிலான மாநில நெருக்கடி நிலைப் பிரகடனமானது பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் வைக்கப்பட்டு, 2 மாத கால அவகாசத்திற்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லையெனில் 2 மாதங்கள் மட்டுமே மாநில நெருக்கடி நிலை அமலில் இருக்கும்.
குடியரசுத் தலைவர் இப்பிரகடனத்தை, தொடர்ந்து வேறொரு அறிவிப்பால் திரும்பப் பெற்றுக் கொள்ளவோ, மாற்றியமைக்கவோ அதிகாரம் பெற்றுள்ளார்.
மாநில நெருக்கடி நிலைப் பிரகடனம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்குத் தொடர்ந்து அமலில் இருக்கும்.
6 மாதங்களுக்குப் பிறகும் பிரகடனம் அமல்படுத்தப்பட வேண்டுமென்றால் மீண்டும் பாராளுமன்றம் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் தீர்மானம் வாயிலாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் நெருக்கடி நிலை 3 ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருக்கக்கூடாது. 3 ஆண்டுகாலம் முடிந்ததும், குடியரசுத் தலைவருக்கோ, பாராளுமன்றத்திற்கோ, அப்பிரகடனத்தைத் தொடர்ந்திருக்கச் செய்ய அதிகாரம் இல்லை.
எனினும் 68-வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பஞ்சாப் மாநிலத்தில் 1987-ல் பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வழி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநில சட்டப்பேரவை கலைக்கப்படலாம், அல்லது அதன் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை அம்மாநிலத்தின் அரசியலமைப்பு பிரிவு 92-ன்படி ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின், அங்கு மாநில ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
எனினும் பிற மாநிலங்கள் போலின்றி, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி 6 மாத காலம் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட இயலும்.
ஜனாதிபதி ஆட்சி
இந்தியாவில் முதல் முதலில் ஷரத்து 356-ன் கீழ் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப். ஜுன் 20, 1951 முதல் ஏப்ரல் 17, 1952 வரை பஞ்சாப் மாநிலத்தில் சட்ட மன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது. (TNPSC Exam-ல் அடிக்கடி இவ்வினா கேட்கப்படுகிறது.)
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் கிளர்ச்சி சூழல் காரணமாக, இந்தியாவில் முதன் முறையாக, ஷரத்து 356-ன் கீழ், கேரள மாநில சட்டமன்றம் ஜூலை 31, 1951-ல் கலைக்கப்பட்டு, மாநில நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.
கேரள மாநில சட்டமன்றம் பிப்ரவரி 22, 1960 வரை இந்த நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தது.
2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் மிக அதிக முறை மாநில நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட மாநிலம் மணிப்பூர் (10 முறை ). உத்திரப்பிரதேசத்தில் 9 முறையும், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களில் 8 முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக நீண்ட காலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் மாநில நெருக்கடி நிலையில் இருந்த மாநிலம் நாகாலாந்து. (மார்ச் 20, 1975 முதல் நவம்பர் 25, 1977 வரை 2 ஆண்டுகள், 8 மாதங்கள், 10 நாட்கள்).
இந்தியாவில் மிகக் குறுகிய காலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் மாநில நெருக்கடி நிலையில் இருந்த மாநிலம் கர்நாடகா. (10.10.1990 முதல் 17.10. 1990 வரை 10 நாட்கள்).
மிக அதிக முறை மாநில நெருக்கடி நிலை அறிவிப்பு செய்யப்பட்டு அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நடை பெற்றது.
தமிழகத்தில் 2015 வரை 4 முறை ஷரத்து 356 பிறப்பிக்கப்பட்டுள்ளது. (இந்தப்பகுதியிலிருந்து TNPSC EXAM கேள்விகள் அமைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.)
நிதி நெருக்கடி நிலை
Art.360-ன்படி, இந்தியாவின் நிதி நிலைமை அல்லது கடன் நிலைமை அச்சுறுத்தப்படக்கூடிய சூழ்நிலை இந்தியா முழுவதிலுமோ, அல்லது ஏதேனும் ஒரு இந்தியப் பகுதியிலோ ஏற்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால், அவர் நிதி நெருக்கடி நிலையைப் (Financial Emergency) பிரகடனம் செய்யலாம் என Art.360 குறிப்பிடுகிறது.
குடியரசுத் தலைவரின் நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம், பாராளுமன்றத்தின் இரு சபைகளின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, இரு அவைகளிலும் எளிய பெரும்பான்மை (Simple Majority) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நிதி நெருக்கடி நிலை அமலில் இருக்கும்.
அவ்வாறு ஒப்புதல் பெறப்படாவிட்டால் நிதி நெருக்கடி நிலை 2 மாத கால முடிவில் தாமாகவே செயலிழந்துவிடும்.
நிதி நெருக்கடி நிலைக்கு அதிகபட்ச கால வரம்பு ஏதும் இல்லை. பிற நெருக்கடி நிலைகளைப்போல் அவ்வப்போது பாராளுமன்றத்திடம் ஒப்புதல் பெறவேண்டிய கட்டுப்பாடு ஏதும் இல்லை.
மேலும் நிதி நெருக்கடி நிலையை, குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் ஓர் அறிவிப்பின் மூலம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். திரும்ப பெறுவதற்கு பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
நிதிநிலை நெருக்கடி நடைமுறையில் உள்ளபோது, மாநில அரசுகள் சில குறிப்பிட்ட நிதிநிலைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.
மேலும் மாநில அரசின் கீழ் பணியாற்றுவோரின் ஊதியத்தையும் படிகளையும் குறைப்பது, மாநில சட்டமன்றங்கள் இயற்றிய பண மசோதாக்கள் மற்றும் நிதி மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.
மேலும் ஒன்றியத்தின் கீழ் பணிபுரியும் அனைவருடைய ஊதியங்களையும், படிகளையும், (உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் உட்பட) குறைக்கவேண்டுமென்றும் குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.
நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது முதல் இது வரை ஒருமுறை கூட நிதி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதில்லை.